தேடல்

Sunday 15 January 2012

நியாயத்தைத் தேடி...


புத்தாண்டுகள்
புதிதாய் பிறந்தாலும்,
இன்னும் மாறவில்லை..
கடந்து வந்த பாதைகளின்
அவலச் சுவடுகள்.!

போராட்டங்கள்,
ஆர்பாட்டங்கள்,
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்..  
கடையடைப்புகள்,
மனித சங்கிலிகள்,
பேருந்து மறியல்கள்,
இரயில் மறியல்கள்...



போராட்டங்களின்,
அதிர்வலைகள் மாறும் முன்னே..
மீண்டும் மறக்கடிக்கபடுகிறது.?
மறுபடியும்
புதிய கிளர்ச்சிகள்.!

நியாயத்தின் முழக்கங்கள்
நிர்கதியாய்..
அநியாயத்தின் ஆதரவாளர்கள்
பெரும் திரளாய்..!

உயிர் பயம் காட்டியே,
அணு உலையின் கதவுகள் அடைக்கப்படுகிறது !
கூடங்குளத்தில்..
அணை மதகுகளின் கதவுகள் திறக்கப்படுகிறது !
முல்லை பெரியாரில்...

நூறாண்டு மட்டும்
வாழ்பவனின் கைரேகை,
கணிக்கப்படுகிறது - உனக்கு
அணு உலையால் தான் மரணமென்று !
கூடங்குளத்தில்..


தொள்ளாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டியவனின் ஆயுள் ரேகை,
அழிக்கப்படுகிறது - நீ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று !
முல்லை பெரியாரில்...


மரண நண்பன்
கணப் பொழுதும் நம்முடன் தான்,
காலம் கழிக்கிறான்...

கூடங்குளத்திலும்,
முல்லை பெரியாரிலும் அல்ல !



தமிழ் மீனவனின்,
இரத்தம் குடித்தே தாகம் தீர்க்கும்
சிங்கள சாத்தான்கள்  - சர்வ
சுதந்திரமாய் சிறகடிக்கிறது..
மீண்டும் தமிழ் இரத்தம் கேட்டு !


கச்சத் தீவை,
பிச்சை போட்ட நாமும் எடுக்கிறோம்.?
இப்போது இலவசப் பிச்சை!

ஆட்சி கட்டிலில்,
அதிகார வர்க்கம்..
இலவசங்களை பிச்சைஎடுக்கும்
ஏமாளிகளாய் நாம்.! 

மதுவை
மலிவாக்கி மக்களை மயக்கிய, 
அரசாங்கமும்  தள்ளாடுகிறது..
கூட்டணி போதையில் ! 


நூறாயிரம் கோடிகள்
இலாபம் கொழிக்கும் தொழிலாய்... 
கள்ளச் சாராயத்தை
ஒழித்த களிப்பில்,
நாட்டு சரக்குடன் நாம்..!

போராடியே.. பழகியதால்,
புதுப் பொலிவுடன் புத்தாண்டிலும்,
தொடர்கிறது போராட்டங்கள் ..
நியாயத்தைத் தேடி...

1 comment:

  1. " நியாயத்தின் முழக்கங்கள்
    நிர்கதியாய்..
    அநியாயத்தின் ஆதரவாளர்கள்
    பெரும் திரளாய்..!"

    Excellent lines.. Salih.. keep it up as you do always..

    ReplyDelete